உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி

Published On 2023-02-01 07:03 GMT   |   Update On 2023-02-01 07:03 GMT
  • ராமநாதபுரம் அருகே எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட விழிப்புணர்வு பேரணி திருப்புலாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் சண்முநாதன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

திருப்புல்லாணி கோவில், பஸ் நிறுத்தம், கடைவீதி வழியாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, இணைவோம் புதிய பாரத திட்டத்தில் என்று கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டாரக் கல்வி அலுவவர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டியராசு, செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், சந்திரசேகர், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி ஏற்பாடுகளை செய்தார்.

Tags:    

Similar News