உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள்

Published On 2023-06-27 08:25 GMT   |   Update On 2023-06-27 08:25 GMT
  • கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன.
  • அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம், நீதிமன்றம், டி.ஐ.ஜி. அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், உள்ளிட்ட மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. ஆனால் இந்த வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மறைவான பகுதிகளில் அமர்ந்து கஞ்சா, மது அருந்தி வருகின்றனர். அவர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்கள் அந்த பகுதியில் சிதறி கிடக்கின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக விரோதிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News