உள்ளூர் செய்திகள்

அதிக அளவில் பிடிபட்ட வாளை மீன்கள்

Published On 2023-03-30 14:15 IST   |   Update On 2023-03-30 14:15:00 IST
  • பாம்பனில் வாளை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது.
  • உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

ராமேசுவரம்

ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.

இதற்கிடையில் பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் திரும்பினார்கள்.

இதில் பெரும்பாலான மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்தது. மீனவர்களின் வலைகளில் வௌ மீன், பாறை மீன், மா உழா உள்ளிட்ட பல்வேறு மீன்கள் சிக்கின. பல மீனவர்களின் வலைகளில் வாளை மீன்கள் அதிகமாக சிக்கி இருந்தன.

இதனால் வாளை மீன் சீசன் தொடங்கி உள்ள தாகவும், இனி வரும் நாட்க ளில் வாளை மீன்கள் அதிக மாக கிடைக்கும். சீசன் தொடங்கி உள்ளதால் வருமானம் அதிகரிக்கும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வாளை மீன் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விறபனையாகின. அவை களை வியாபாரிகள் வாங்கி கேரள மீன் மார்க்கெட்டு களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News