உள்ளூர் செய்திகள்

தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க அறிவுறுத்தல்

Published On 2022-12-05 06:55 GMT   |   Update On 2022-12-05 06:55 GMT
  • தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும் என ேவளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
  • முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

கலைஞர் திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள 60ம் குறுவை சாகுபடி பயிர்களை பார்வையிட்டார்.

பின்னர் வயல்வரப்புகளில் விதைப்பதற்காக துவரை விதைகளை விநியோகம் செய்தார். வயல் வரப்புகளில் பயறு வகைகள் பயிரிடு வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

அட்மா திட்டத்தில் தொழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்ட உதவி இயக்குநர் தொழு உரத்தை அப்படியே விதைக்காமல் சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும். அதனால் மண் வளம் காக்கப்படும். வேர்கள் செழித்து வளரும் என்றார்.

பின்னர் வளநாடு கிராமத்தில் பிரதம மந்திரி யின் நிதி திட்டத்தில் நடை பெற்று வரும் கே.ஒய்.சி. பணிகளை ஆய்வு செய்தார். பயனாளிகள் தங்கள் கைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

விவசாயிகள் கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே அதன் பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர்வேளாண்மை உதவி இயக்குநர் கேசவ ராமன், உதவி வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News