உள்ளூர் செய்திகள்

ஓட்டல்களில் பார்சல், சாப்பிட மெழுகு பேப்பர் இலை பயன்பாடு அதிகரிப்பு

Published On 2023-06-06 08:07 GMT   |   Update On 2023-06-06 08:07 GMT
  • வாழை இலை விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் பார்சல், சாப்பிட மெழுகு பேப்பர் இலை பயன்பாடு அதிகரித்துள்ளது.
  • பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் குறைந்த அளவே சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள், அதிக அளவில் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது.

தற்போது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வைகாசி திருவிழா, சுபமுகூர்த்த தினங்களால் வாழை இலை யின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வெளியூர்க ளில் இருந்து வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.800 வரை விற்ற ஒரு கட்டு வாழை இலை (180 முதல் 200 எண்ணிக்கை) தற்போது ரூ.900 முதல் ரூ.1000 வரை விற்கப்படு கிறது. இதனால் ஓட்டல்களில் சாப்பிடவும், பார்சல் வழங்க வும் பேப்பர் இலை தட்டை பயன்படுத்துகின்றனர்.

விலை உயர்வால் ஓட்டல்களில் மொத்தமாக இலை வாங்குவது குறைந்து உள்ளது. மேலும் காற்று காரணமாக இலைகள் கிழிந்தும் வருகிறது. இத னால் வாழை இலை தட்டுப்பாடு ஏற்பட்டு பேப்பர் இலை தட்டு பயன்பாடு அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News