உள்ளூர் செய்திகள்
உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம்
- உத்திரகோசமங்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ''நம்ம ஊரு சூப்பரு'' குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.