கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- விசைப்படகு மீனவர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் மூலம் மீனவர்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் 56 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டதுடன் மீனவர்களிடம் கோரிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மீனவர் கள் பிரதானமாக முன் வைத்த கோரிக்கையான மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டு அதற்கான இழப்பீடு அரசு வழங்கி வந்த நிலையில் விடுபட்ட சிலருக்கு வழங்காமல் உள்ளதை விரைந்து அரசிடமிருந்து பெற்று தர வேண்டுதல் மற்றும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருபவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொள்முதல் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டியும், மேலும் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் நரம்பு வலைகளை தடுத்து நூல் வலைகளை பயன் படுத்த வேண்டி கேட்டு கொண்டார்கள்.
பின்னர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதா வது:- மீனவர்களின் கோரிக்கைக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மீனவர் களுக்கு தங்கள் பொருளுக் குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டு மனை பட்டா தகுதி உடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை கண்காணிக்கப்பட்டு வரு கிறது.
பொதுவாக அரசின் திட்டங்களை முழுமையாக உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்திட வேண்டும் என் பது தான் அலுவலர்களின் நோக்கம். அதிக நீளம் கொண்ட கடல் பகுதியான நமது மாவட்டத்தில் மீனவர்களின் நலனில் மாவட்ட நிர் வாகம் எப்பொழுதும் அக் கறையுடன் இருக்கும். அதே போல் நாட்டுப் படகு மீனவர்களும், விசைப்படகு மீன வர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டு என்று அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி நாத், ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லானி, சிவக் குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.