உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. கவுன்சிலருக்கு மிரட்டல்

Published On 2023-10-03 12:53 IST   |   Update On 2023-10-03 12:53:00 IST
  • நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. கவுன்சிலர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளனர்.
  • விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப் பாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் நகராட்சி கவுன்சிலருமான முகமது ஜஹாங்கீர், நகர சபை தலைவர் கார்மேகத்து டன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் குமார் மத பிரச்சினையை தூண்டும் வகையில் பேசினார். கடந்த வாரம் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் இதே பிரச்சினையை எழுப்பி தி.மு.க. கவுன்சிலர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

இதனை தட்டி கேட்டதற்காக என்னை அச்சுறுத்தும் வகையில் பேசி மிரட்டல் விடுத்தார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார்.

இது குறித்து நகரசபைத் தலைவர் கார்மேகம் கூறு கையில், பா.ஜ.க. 31-வது வார்டு கவுன்சிலர் குமார் தொடர்ந்து எங்களை மக்கள் பணி செய்ய விடா மல் மறைமுகமாக தடுத்து வருகிறார். அதைப்பற்றி நாங்கள் துளியும் கவலைப் பட மாட்டோம். தொடர்ந்து மக்கள் பணி செய்வோம்.

அவரது இந்த செய லானது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நல்லி ணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.எல்லா வற்றிற்கும் மேலாக கவுன்சி லர்களை ஒருமையில் பேசி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் நகராட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த கவுன் சிலர் ஒருவரை பொதுக் கூட்டத்தில் ஒருமையில் பேசி, நகர் மன்ற கூட்ட ரங்கில் அவருக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியிருப்பது குறித்து போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்துள் ேளாம். விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News