உள்ளூர் செய்திகள்
- தேர் பவனி விழா நடந்தது.
- நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் உள்ள ஜெபமாலை அன்னை சர்ச் பெருவிழா செப்.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நவ நாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் மறை மாவட்ட பாதிரியார் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தேர் பவனி விழா நேற்று நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. தேர் பவனியில் பங்கு அருள் பணிப் பேரவையினர், தொழில் முனைவோர், வணிகர்கள், ஜெபமாலை அன்னை பக்தர்கள், பங்கு இறைமக்கள் பங்கேற்றனர். நேற்று முதல் இறை விருந்து திருப்பலி, மாலையில் திருப்பலியும், நற்கருனை பணி, ஆசியும் நடந்தது. ராமநாதபுரம் பாதிரி யார்கள் சிங்கராயர், ரீகன் தேவசகாயம் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.