உள்ளூர் செய்திகள்

செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு

Published On 2023-04-12 08:34 GMT   |   Update On 2023-04-12 08:34 GMT
  • செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஜானகி வரவேற்றார். கவுன்சிலர் முருகன் (அ.ம.மு.க.) செல்வநாயகபுரம் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்க நிதி வழங்கிய யூனியன் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். கலைசெல்வி ராஜசேகர் (வெங்கலக்குறிச்சி) வெண்ணீர்வாய்க்கால் பள்ளி சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும் விளங்குளத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News