உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை

Published On 2022-12-21 12:16 IST   |   Update On 2022-12-21 12:16:00 IST
  • தனியார் கணினி மையங்களில் வருவாய்த்துறை சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய Citizen Login முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய்த்துறை சான்றுகள்,

6 வகையான முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்று களில் எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுகிறது என்று புகார்கள் வருகின்றன.

பொது இ-சேவை மைய ங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றி தழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

தனியார் கணினி மையங்களில் Citizen Login-ல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்மந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும்.

சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு edm1rmd.tnegatn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின் மாவட்ட மேலாளரிடம் நேரடியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News