உள்ளூர் செய்திகள்

கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா.

தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று

Published On 2022-06-28 08:38 GMT   |   Update On 2022-06-28 08:38 GMT
  • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டில் ஏ பிளஸ் தரச்சான்று அளித்துள்ளது.
  • அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமையை பெற்றுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிர்லாஸ்பூரில் அமைந்துள்ள குரு காசி தாஸ் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். அலோக் சக்கரவால் தலை மையில் வந்த குழுவினர் கல்லூரியின் உள்கட்ட மைப்பு வசதிகள், பேராசிரி யர்களின் தரம், மாணவ ர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் மதிப்பெண் 4-க்கு 3.32 அளித்து ஏ பிளஸ் தரச்சான்றிதழ் வழங்கப்ப ட்டுள்ளது.

இது குறித்து கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:-

எங்கள் கல்லூரி 25-ம் ஆண்டில் எடுத்து வைக்கும் இந்த தருணத்தில் ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பின் தங்கிய மாவட்டமென அழைக்கப்படும் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரு நகரங்களுக்கு இணையான வசதிகளை நம் பகுதியிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது,

ராமநாதபுரம் மாவ ட்டத்தில் முதல் பொறியியல் கல்லூரியாகவும், தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 17 கல்லூரிகள் தான் இந்த ஏ பிளஸ் சான்றிதழை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும் அந்த பெருமை யை பெற்றுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News