உள்ளூர் செய்திகள்

300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

Published On 2022-08-02 09:13 GMT   |   Update On 2022-08-02 09:13 GMT
  • ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
  • இவைகளின் ெமாத்த மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

ராமநாதபுரம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை கடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் கடலோர பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கடத்தலை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று தனுஷ்கோடி பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 96 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இந்த நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மன்சூர் அலிகான் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News