உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த மாணவிகளிடம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உரையாடினார்.

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 256 மனுக்கள் பெறப்பட்டது

Published On 2023-08-22 06:52 GMT   |   Update On 2023-08-22 06:52 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 256 மனுக்கள் பெறப்பட்டது.
  • உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது. மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்க ளுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்க ளிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவு றுத்தினார்

தொடர்ந்து, அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த சித்ராதேவி இயற்கை மரணம் அடைந்ததை யொட்டி ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வாரிசுதாரரிடம் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News