உள்ளூர் செய்திகள் (District)

15 பவுன் நகை மாயம்

Published On 2023-06-23 08:47 GMT   |   Update On 2023-06-23 08:47 GMT
  • ராமநாதபுரத்தில் 15 பவுன் நகை மாயமானது.
  • மகன் மீது தாய் போலீசில் புகார் செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 70). இவர் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நிலை சரியில்லாமல் தனது மகள் பவானி என்பவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீரம்மாள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை. நகை வைத்து இருந்த பீரோ உடைக்கப் படவில்லை எனவும், தனது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் தனது மகன் மீது சந்தேகம் உள்ளதாகவும் வீரம்மாள் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News