உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-31 09:51 GMT   |   Update On 2022-10-31 10:11 GMT
  • பேரணியை மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.
  • பேரணி சீர்காழி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

சீர்காழி:

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நி லைப் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் சீர்காழிடெம்பிள் டவுன் இணைந்துநாட்டு நலப்பணி திட்ட மாணவ ர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரணியை. மாவட்ட உதவி ஆளுநர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

முகாம் அலுவலர் முரளிதரன், ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள் சுப்பு சொர்ண பால், தங்க.ரவிச்சந்திரன், மலர்கண்ணன், பாலாஜி, முரளி, மோகனசுந்தரம், முன்னாள் செயலாளர்கள் வெங்கடாஜலபதி, விஜயன், குமார், சந்தோஷ் மற்றும் காவல்துறை, போக்குவரத்து காவல்த் துறையினர், கலந்துக் கொண்டனர். பேரணி சீர்காழி முக்கிய வீதி வழியாக சென்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் செய்தார். நிறைவில் சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் பிரபாகரன் நன்றிக் கூறினார்.

Tags:    

Similar News