உள்ளூர் செய்திகள்

பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

சாரல் மழையில் உற்சாகம் : விளையாட்டு மைதானமாக மாறிய பிரையண்ட் பூங்கா

Published On 2023-05-09 07:16 GMT   |   Update On 2023-05-09 07:16 GMT
  • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
  • சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

கொடைக்கானல் :

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் சிறிது நேரம் வெயிலும், மாலை வேளையில் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே கொடைக்கா னல் நகர் பகுதிகள் மட்டு மின்றி பல்வேறு இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது.

கொடைக்கானல் அண்ணா சாலை, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் கொடைக்கான லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் நிலவிய குளிரை அனு பவித்து மகிழ்ச்சியடை ந்தனர்.

மேலும் பிரையண்ட் பூங்காவில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் பூக்கள் அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேரத்தில் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரவு நேரத்தில் சாலைகளில் நீர் வெள்ளம்போல் வழிந்தோடியதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இருந்த போதும் பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருவதை பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

Tags:    

Similar News