உள்ளூர் செய்திகள்
- சென்னையில் ஓரிரு இடங்கள் லேசான மழை பெய்தது.
- இந்த மழையால் கோடை வெயில் சற்று தணிந்தது.
சென்னை:
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்தது. சென்னை எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோடை வெயில் சற்று தணிந்தது. கோடை மழையால் வெப்பம் குறைந்ததை தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.