உள்ளூர் செய்திகள்

சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது.

நாகூர், காங்கேய சித்தர் பீடத்தில் பவுர்ணமி யாகம்

Published On 2023-02-06 07:42 GMT   |   Update On 2023-02-06 07:42 GMT
  • திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.
  • தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

நாகப்பட்டினம்:

நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் தைப்பூச பவுர்ணமி யாகமானது நடைபெற்றது.

தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்கு கிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.

இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கி றோம்.

ஆகவே இந்ததைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.மாத ம்தோறும் வரும் பௌர்ணமிதனையாகத்தை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரும் ஸ்ரீ காங்கேய சித்தர் வழிபாட்டு குழுவை சேர்ந்த தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் இந்த மாத யாகத்தினையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காரைக்கால் மற்றும் நாகூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றார்கள்.

Tags:    

Similar News