உள்ளூர் செய்திகள்

நாவல் ஏரிக்கான வாய்க்கால்களை தூர் வார கோரிக்கை

Published On 2023-10-17 13:49 IST   |   Update On 2023-10-17 13:49:00 IST
  • கந்தர்வகோட்டைநாவல் ஏரிக்கான வாய்க்கால்களை தூர் வார கோரிக்கை
  • பல ஆண்டுகளாக தூர்வாராமல் மணல் மேடுகளாகவும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது

கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக சுமார் 200ஏக்கர் பரப்பளவுள்ள நாவல் ஏரி உள்ளது.சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியன் வரத்து வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் மணல் மேடுகளாகவும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது.இதனால் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வராமல் வீணாகிறது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் கருதி நாவல் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர் வாரியம் மதகுகளை செப்பனிட கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News