உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

Published On 2023-10-11 06:12 GMT   |   Update On 2023-10-11 06:12 GMT
  • கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
  • ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நீலா சிவசங்கரி அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பாக்கியலெட்சுமி, மரிகார்லியா, பவானி, முத்து, பாக்கியலெட்சுமி , சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News