உள்ளூர் செய்திகள்

விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழா

Published On 2023-11-11 11:25 IST   |   Update On 2023-11-11 11:25:00 IST
  • கந்தர்வகோட்டையில்விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழா
  • அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டையில் 2ம்- கட்டமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் சண்முகா திரையரங்க வளாகத்தில் மகளிர் உரிமைத் தொ கைக்கு மேல் முறையீடு செய்தவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மேல் முறையீடு செய்த குடும்ப தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, கோட்டாட்சியர் முருகேசன் ,தாசில்தார் ராமசாமி ,தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்தி ரன், ஒன்றிய குழு உறுப்பி னர் திருப்பதி, வைர க்கண்ணு, ஊராட்சி மன்ற தலை வர்கள் தமிழ்ச்செல்வி, ராணி முருகேசன், சிவரஞ்சனி சசிகுமார் ,இளைஞரணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News