உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு மெகா பட்டாசு கடை

Published On 2023-11-05 08:53 GMT   |   Update On 2023-11-05 08:53 GMT
  • புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு கடை
  • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை,  

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இந்தாண்டு புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.80 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ கவிதை பித்தன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத்அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், சந்தோஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News