புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்புல் கூறியருப்பதாவது:-
விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பவரிவர்த்தனை (யு.பி.ஐ) மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேற்கண்டவாறு பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டது.
தற்போது இது அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் செயல்படுத்திட விரிவுபடுத்தப்பட்டு, நடைமு றைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படுத்தப்படும், இந்த பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும்ப யன்படுத்தி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.