உள்ளூர் செய்திகள்

விலையில்லா கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-11-10 06:36 GMT   |   Update On 2023-11-10 06:36 GMT
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கியாஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்
  • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவிலான உஜ்வாலா கமிட்டி கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது ஏழை, எளிய பொது மக்களுக்காக எண்ணற்றத் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகி ன்றன. அந்தவகையில் உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப பெண்களுக்கு முன்வைப்பு தொகை இன்றி, எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு உள்ளி ட்டவைகள் விலை யின்றி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பொதுமக்கள் அருகிலுள்ள எரிவாயு உருளை வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கமிட்டி உறுப்பினர்கள் பொது மக்களிடையே இத்திட்டம் தொடர்பாக விழிப்பு ணர்வை ஏற்படு த்திடவும், பயனாளிகள் சேர்க்கை விவரம் குறித்து அறிக்கை யினை வாரந்தோ றும் சமர்ப்பித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News