உள்ளூர் செய்திகள்

ரூ.1.25 கோடி மதிப்பீல்ஆரம்ப சுகாதார மைய கட்டடம்

Published On 2023-10-24 06:18 GMT   |   Update On 2023-10-24 06:18 GMT
புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில்ரூ.1.25 கோடி மதிப்பீல் ஆரம்ப சுகாதார மைய கட்டடம்

ஆலங்குடி 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் மாநிலங்க ளவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் மேம்படு த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் கட்டடப் பணியினை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களை வழங்கினர்.

திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் பேசியதாவது:-

இந்த கட்டடத்தில் அலுவலகத்துறை, மருத்துவ அலுவலர் பணியாளர் அறை, மருத்துவ அறை ,அவசர வார்டு ஆய்வகம், ஆண் பெண் மாற்றுத்தி றனாளிகள் கழிவறைகள் உள்ளிட்டவைகள் 257.65 சதுர மீட்டர் அளவு பரப்பளவில் கட்டப்பட உள்ளது என்று அவர் பேசினார்.

அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியார், திருரவங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் நமசிவாயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் , ராகுல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News