உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டதிற்கு சிறப்பு திட்டங்கள்

Published On 2023-08-11 09:19 GMT   |   Update On 2023-08-11 09:19 GMT
  • ஏழைகள் அதிகம் வசிக்கும்புதுக்கோட்டை மாவட்டதிற்கு சிறப்பு திட்டங்கள்
  • இந்திய மாதர் சம்மேளத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கக்குழு கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர்  ஜெயா தலைமையில்  வடக்கு ராஜ வீதி  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநில செயலாளர்  ஜி.மஞ்சுளா இன்றைய அரசியல் நிலை குறித் தும்  சங்கத்தின் செயல்பாடு கள் குறித்தும் பேசினார் .

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்  த.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள்  தனலட்சுமி, கோமதி, விமலா, பரமேஸ்வரி, பஞ்சவர்ணம் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் பெண் மருத்து வர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண் டும், கேரளாவை போல்  ரேஷன் கடைகளில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்,  புதுக்கோட்டை மாவட்டம் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என  நிதி ஆயோக் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது, வறுமையிலும் கல்வியிலும் இந்ம மாவட்டம் பின் தங்கியுள்ளதால்  மத்திய அரசும் மாநில அரசும் அதற்கு ஏற்ப  சிறப்பு திட்டங்களை  அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள்  ஏக மனதாக நிறைவேற்ற ப்பட்டன.

Tags:    

Similar News