உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான கால்பந்து போட்டி

Published On 2023-11-22 06:44 GMT   |   Update On 2023-11-22 06:44 GMT
  • மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி சாதனை
  • மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவர் சிறந்த வீரராக தேர்வு

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி மண்டல அளவில் கால்பந்து போட்டி பிஷப் தேவ தாஸ் அம்புரோஸ் வித்யாலயா சீனியர் செ கண்டரி பள்ளியில் நடை பெற்றது.இதில் 39 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மவுண்ட் சீயோன் சர்வ தேசப் பள்ளி மாண வர்கள், கலந்து கொண்டு, மூன்றா மிடம் பிடித்து சாதனை படைத்தனர். 9-ம் வகுப்பு மாணவன் விஜய் மல்லை யப்பன் இந்த தொடரில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இப்போட்டிக்கு பள்ளி யில் இருந்து 16 மாண வர்களை கொண்ட குழு விற்கு குறுகியகாலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும்,பயிற்சியாளருமான ரூடவ்ஸ்வரன்யும், பள்ளி யின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்த லைவர் ஏஞ்சலின் ஜோ னத்தன், பள்ளியின் முதல்வர் ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.

Tags:    

Similar News