உள்ளூர் செய்திகள்
- உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழு சுகாதார இயக்கம் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார ஓட்டம் மற்றும் நடைபயண பேரணி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில் நோயின்றி வாழ கழிப்பறையை பயன்படுத்தவும், கிராமத்தையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.