உள்ளூர் செய்திகள்

குளத்தில் விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-07-06 08:10 GMT   |   Update On 2022-07-06 08:10 GMT
  • குளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
  • குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டி ஊராட்சி நல்லம்மாள் நகர் பகுதி சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஆனந்த் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் புதுவளவு பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பொன்-புதுப்பட்டி அருகே அம்பலகாரன் கண்மாயில் நேற்று மதியம் கடையில் வைத்திருந்த தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதாக கிளம்பி உள்ளார். சேங்கை ஊரணி மேற்கு பகுதியில் உள்ள அம்பலகாரன் கண்மாய் அருகே சென்றதை உறவினர்கள் பார்த்துள்ளனர். மேலும் குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை.

மேலும் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த செருப்பும் கரையில் கிடந்தது தெரிய வந்தது. நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் பாதாலக்கரண்டி மூலம் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஆனந்த்தின் உடல் சிக்கியது. சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்வம் பொன்-புதுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Tags:    

Similar News