உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து ெ பண் உயிரிழப்பு

Published On 2023-02-03 05:28 GMT   |   Update On 2023-02-03 05:28 GMT
  • மின்சாரம் பாய்ந்து ெ பண் உயிரிழந்தார்
  • மாடு மேய்த்த போது நடந்த சம்பவம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டியை சேர்ந்தவர் அரங்கன் மனைவி சிட்டு (வயது 53). பாலக்குடிப்பட்டி வயல்வெளியில் நேற்று மாடு மேய்த்துள்ளார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை சிட்டு மித்தபோது, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News