உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம்

Published On 2023-03-23 12:43 IST   |   Update On 2023-03-23 12:43:00 IST
  • உலக தண்ணீர் தினத்தை கிராமசபை கூட்டம் நடைபெற்றது
  • கலெக்டர் கவிதா ராமு பங்கேற்பு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.உலக தண்ணீர் தினமான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.கலெக்டர் பேசும் போது, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரின் அருமைகருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பயனடைந்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் சின்னையா, வருவாய் கோட்டட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சம்பத், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், வட்டா ட்சியர் விஜயலெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அலுவலலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News