உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம்

Published On 2022-11-30 06:50 GMT   |   Update On 2022-11-30 06:50 GMT
  • பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
  • சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சீதாலட்சுமி திருக்கோவில் ஐந்தாவது ஆண்டு வருடம் அபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த அபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டு சென்றனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News