புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா
- புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது
- மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை கோட்டத்தி ற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்