உள்ளூர் செய்திகள்

60 ஆடுகளை வேனில் கடத்தி வந்த வாலிபர் கைது

Published On 2022-08-25 13:44 IST   |   Update On 2022-08-25 13:44:00 IST
  • 60 ஆடுகளை வேனில் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை:

கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போயின. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.

இதேபோல் ஆலங்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று கறம்பக்குடி சாலையில் வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆடுகள் கடத்தி வரப்பட்டதும் அந்த ஆடுகள் அனைத் தும் கறம்பக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ஆடுகள் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சரக்கு வேன் மற்றும் 60 ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக செல்வராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவிய ல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்த ஆடு களை பறிகொடுத்தோர் கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு திர ண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்போலீசார் புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ஆடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News