உள்ளூர் செய்திகள்

ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யகோரி வலியுறுத்தல்

Published On 2022-06-24 07:04 GMT   |   Update On 2022-06-24 07:04 GMT
  • ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யகோரி வலியுறுத்தப்பட்டது.
  • மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பயின்று வருன்றனர். 40 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிகட்டிடத்தில் ஆங்காங்கே வி ரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேற்கூரையின் உள்பகுதியில் சிமென்ட்பூச் பசு பெயர்ந்து விழுந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 லட்சத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அலுவலர்கள் வழியாகவும், நேரடியாகவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி பள்ளியின் மேற்கூறை இடிந்து விழுந்தது. இதில் 4-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் பரத் காயங்களுடன் உயிர்தப்பினார். இதில் மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி பள்ளித் தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

பள்ளிக்க ட்டிடம் பலவீனமாக இருந்ததற்கு தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் குமரேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மா நில பொதுச்செயலாளர் ரங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முனேற்ற சங்கத்தின் மணிகண்டன் ஆகியோர் வலிறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News