உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை

Published On 2023-03-22 07:33 GMT   |   Update On 2023-03-22 07:33 GMT
  • பாஸ்பரஸ் எலி மருந்து பயன்படுத்த நிரந்தர தடை
  • புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

புதுக்கோட்டை,

அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செ்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ெபாது மக்கள் நலன் கருதி அபாயகரமான மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோ போஸ் 10 சைபர்மெத்ன், குளோர்பைரிபாஸ் 10 சைபர்மெத்ரின் ஆகிய 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகைள, கடந்த 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்க விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதித்தும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி விஷ மருந்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.இத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையாளர்கள், 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. ஆய்வின்போது, தடையை மீறியது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் வரப் பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News