உள்ளூர் செய்திகள்

புதுகை திருவிழா முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு - கவிதை போட்டிகள்

Published On 2022-07-14 14:07 IST   |   Update On 2022-07-14 14:07:00 IST
  • புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டியும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றது. அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா விழாவை ஒருங்கிணைத்தார்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

விழாவில் மாவட்ட இணை செயலாளர் துரையரசன், சின்னராசா, பாக்கியராஜ், ஆசிரியை விஜயலட்சுமி, பாரதிராஜா, சசிகுமார் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

Tags:    

Similar News