உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய வேன் பறிமுதல்

Published On 2023-07-30 12:05 IST   |   Update On 2023-07-30 12:05:00 IST
  • மணல் கடத்திய சரக்கு வேன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
  • மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

புதுக்கோட்டை,

கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் சிலர் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி தட்டாரத்தெரு அருகே சென்ற சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கறம்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின்பானு கொடுத்த புகாரின்பேரில் சூரியகுமார், ரமேஷ்குமார், மன்மத ராஜா, மோகன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணலுடன் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News