உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கொள்ளை

Published On 2023-08-22 13:49 IST   |   Update On 2023-08-22 13:49:00 IST
  • முரட்டு சோளகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது
  • 13 பவுன் நகை, பட்டுப் புடவைகள் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது

கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முரட்டு சோளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது60). ஓய்வு பெற்ற மாவட்ட நில அளவை அலுவலர். தற்போது இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்தனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்த 13 பவுன் நகை, பட்டுப் புடவைகள் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சின்னத்துரை கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.சின்னத்துரை கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News