உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி மீட்பு

Published On 2023-06-27 07:27 GMT   |   Update On 2023-06-27 07:27 GMT
  • ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது
  • சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலின் போது அப்பகுதியில் உள்ள, ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில், பெரியநாயகிக்கு சொந்தமான கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. பொதுமக்கள் மீட்க முயற்சி செய்து பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

Tags:    

Similar News