உள்ளூர் செய்திகள்

உரிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

Published On 2022-11-11 13:22 IST   |   Update On 2022-11-11 13:22:00 IST
  • உரிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
  • கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்க ள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம். பொது மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்

இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது. ஆனால் தாலுகா மருத்துவமனைக்கான எந்த ஒரு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இல்லை. 6 டாக்டர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

அவர்களும் அவ்வப்போது விடுமுறை பெற்று மாற்று பணி என செ ன்று விடுகின்றனர். இரவு பணிக்கு மருத்துவர்கள் இருப்பதில்லை. 5-கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மேலும் ஒரு தாலுகா மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உப கரணங்கள் இங்கு இல்லை. போதிய ஊழியர்கள் மற்றும் இடவசதி இல்லாததால் சில மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தாமலேயே உள்ளன.

நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை

இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் சாலை விபத்து களுக்கு உள்ளாவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்த மருத்துவமனை க்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட மருத்துவர்கள் இல்லா ததால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கோட்டை அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்ற னர்.

இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமா க சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந் த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உடனடியாக மா வட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நியமிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுத லை சிறுத்தை கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் விடுதலை சிறு த்தை கட்சி சார்பாக மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News