உள்ளூர் செய்திகள்

இரும்பு குழாயால் பெயிண்டர் அடித்து கொலை

Published On 2022-07-13 07:30 GMT   |   Update On 2022-07-13 07:30 GMT
  • இரும்பு குழாயால் பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
  • சைக்கிளுக்கு காற்று அடிப்பதற்காக சென்றவர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் (வயது50). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், சூர்யா என்ற மகனும், பார்க்கவி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று தனது சைக்கிளுக்கு காற்று அடிப்பதற்காக அருகில் சென்ற குமாரவேல், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் ரத்த காயங்களுடன் குமாரவேல் கிடந்துள்ளார். சைக்கிள் கீழே சாய்ந்து கிடந்தது. அதன் அருகில் இரும்பு குழாய் ஒன்று கிடந்தது.

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குமாரவேலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் குமாரவேலை யாரும் கொலை செய்து உடலை இங்கே வீசி விட்டு சென்றனரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News