உள்ளூர் செய்திகள்
- புதுக்காட்டையில் கால்நடை மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையை பார்வையிட்ட அவர், அதன் பின்னர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மாடுகளுக்கு கீரை மற்றும் பழங்கள் வழங்கினார். இவ்விழாவில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.