உள்ளூர் செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Published On 2023-11-11 06:05 GMT   |   Update On 2023-11-11 06:05 GMT
  • குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டியில் ௧௦ ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டது
  • அமைச்சர் மெய்யநாதன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி ஊராட்சி மூட்டாம்பட்டி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.  புதிதாக கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இவ்விழாவில்  திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, சுப்பையா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News