உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிய மாணவி மாயம்

Published On 2023-01-20 12:21 IST   |   Update On 2023-01-20 12:21:00 IST
  • வீட்டில் தூங்கிய மாணவி மாயமானார்
  • மாணவி வேங்கிடக்குளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரத் தைச்சேர்ந்த மாதவன் மகள் மாதவி (வயது 17). வேங்கிடக்குளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் தூங்கியவர், விடியற்காலையில் பார்த்த போது படுக்கையில் இல்லாததை கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடிவருகின்றனர்.


Tags:    

Similar News