உள்ளூர் செய்திகள்

காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

Published On 2023-09-02 07:10 GMT   |   Update On 2023-09-02 07:10 GMT
  • மணக்கோலத்தில் காவல் நிலையத்தல் காதல் ஜோடி தஞ்சமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது
  • இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர்

புதுக்கோட்டை,

ஆலங்குடியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தலைமறைவான காதல் ஜோ டி,மணக்கோ லத்தில் வந்து காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த நிலை யில் போலீசார் அவர்களின் பெற்றோர்க ளிடம் சமரசம் செய்து மண மக்களை அனுப்பி வை த்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், படித்த பட்டதாரிகள் என்ற போதிலும் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர்.இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான காதல் ஜோடிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பெங்க ளூரில் தலைம றைவாக இருந்த காதல் ஜோடி திடீரென மண க்கோலத்தில் நேற்று ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தனர்.இருவரும் திருமண வயதை எட்டி விட்டதால் அவர்களின் பெற்றோ ர்களை அழைத்த போலீசார் சமரசம் செய்தனர். இதனை தொடர்ந்து பெ ற்றோர்களால் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட க்கூடாது என்று எழுத்து ப்பூர்வமாக உத்தரவாதத்தை வாங்கிக் கொண்டு மணம க்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News