உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-08-24 09:25 GMT   |   Update On 2023-08-24 09:25 GMT
  • ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்
  • பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியை சேர்ந்தவர் அழகர் மகன் சங்கர் (வயது 28). இவரும், கொத்தமங்கலத்தை சேர்ந்த ராமநாதன் மகள் பிரியதர்ஷினி (26) என்பவரும் காதலித்து அப்பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News