உள்ளூர் செய்திகள்

லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது

Published On 2022-07-09 13:58 IST   |   Update On 2022-07-09 13:58:00 IST
  • லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது

புதுக்கோட்டை:

ஆலங்குடி பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மக்கோட்டை அழகு மகன் சிவா ( வயது 40 ), தெற்கு பாதம்பட்டி ரத்தினவேல் மகன் செல்வம் (35 ), கலிபுல்லா நகர் மஜீத் மகன் அப்துல்லா ( 56), கலிப ல்லாநகர் காலனி கோவிந்தராஜன் மகன் ரவி (52) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செல் போன்மற்றும் ரூ. 2,824 பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News