உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-10-02 08:52 GMT   |   Update On 2022-10-02 08:52 GMT
  • புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
  • வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர்கள் வசித்து வந்த வீடு தற்சமயம் பழுது அடைந்திருப்பதால் வீட்டை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அவர்கள் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்து பழுது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News